பிரேசில் விமான நிலையத்தில் திடீரென ஓடிய ஆபாச படம்! பயணிகள் அதிர்ச்சி! என்ன நடந்தது தெரியுமா?
ரியோ டீ ஜெனிரோ: பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டீ ஜெனிரோ விமான நிலையத்தில் அறிவிப்புகள் வெளியாகும் திரைகளில் ஆபாசபடங்கள் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளுடன் வந்த பெற்றோர் அவர்களின் கண்களை மூடினர்.
பிரேசில் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று ரியோ டீ ஜெனிரோ. இதுதான் அந்த நாட்டின் மிகப்பெரிய கடற்கரை நகராகும்.
இங்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் சுற்றுலா வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு நகரில் உள்ள அழகிய கடற்கரை, சுவாரசியமான இரவு பார்ட்டிகள் உள்ளிட்ட சிலவற்றை காரணமாக கூறலாம்.
சர்வதேச விமான நிலையம்
வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக ரியோ டீ ஜெனிரோவில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் விமான நிலையத்துக்கு விமானங்கள் வந்து சென்றனர். மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. பரபரப்பாக இயங்கி விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதோடு, விமானங்களின் விபரங்கள் பெரிய திரைகளில் ஓடின.
ஆபாசபடம்
இந்நிலையில் திடீரென்று பெரிய திரைகளில் விமானங்கள் பற்றிய அறிவிப்புகள் நின்றன. மாறாக ஆபாசபடம் ஓடத்துவங்கியது. இதனால் அங்குள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில பயணிகள் ஆபாச படத்தைப் பார்த்து சிரித்த நிலையில் பலர் தலையை கவிழ்ந்து கொண்டனர். மேலும் குழந்தைகளுடன் வந்தவர்கள் அவர்களின் கண்களை மூடினர்.
விசாரணை
இதையடுத்து சிறிது நேரத்துக்கு பிறகு இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது. இதனால் மீண்டும் திரைகளில் விமானங்கள் பற்றிய அறிவிப்புகள் ஓட தொடங்கின. இந்த சம்பவம் பற்றி விமான நிலைய நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆனால் திரையில் ஆபாசபடம் ஓடியது எப்படி என்பதற்கான காரணம் தெரியவில்லை. விமானநிலையத்தின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து ஆபாச படங்களை ஒளிபரப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டிசன்கள் கருத்து
இதற்கிடையே விமான நிலைய திரைகளில் ஆபாசபடம் ஓடியது வீடியோ மற்றும் போட்டோவாக இணையதளத்தில் பரவ துவங்கியது. இதையடுத்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர் ‛ஐ லவ் ரியோ' எனவும், இன்னொருவர் ‛இது ஏர்போர்ட் இல்லை ஏர்பார்ன்' என வேடிக்கையாக கூறியுள்ளனர். அதேநேரத்தில், ‛‛இது விமான நிலைய நிர்வாகத்தின் மிகப்பெரிய கவனக்குறைவு. இத்தகைய சூழலில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரின் மனநிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்'' என கவலை தெரிவித்துள்ளார்.