கொதிக்கும் எண்ணெயில் கூல் தியானம்!... அதிசய புத்த துறவி!!
லம்பு: கொதிக்கும் எண்ணெய் லேசாக மேலே பட்டாலே துடித்துப் போய்விடுவோம். ஆனால் ஒரு புத்ததுறவியோ கொதிக்கும் எண்ணெயில் கூலாக அமர்ந்து தியானம் செய்கிறார். இந்த துறவியை அதிசயபிறவியாக கொண்டாடுகின்றனர்.
தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுகிறது அவைகள் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது.
இவர் தொடும் பொருட்களில் இவரின் சக்தி ஊடுருவதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயதுக்கள் அல்லது துணி துண்டுகளை அவரின் கைபட்டு எடுத்து செல்கிறார்கள்.
துறவியின் தியானம்
இந்த நிலையில் நாங் புவா சில நாட்களுக்கு முன் கொதிக்கும் ஒரு பெரிய பாத்திரம் வைத்து அதில் முழுவதும் எண்ணெய் நிரபபட்டு இருந்தது அதில் துறவி அமர்ந்து இருந்தார். அடிபகுதியில் தீ நன்கு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது.
எண்ணெய் பாத்திரத்தில்
தீ மூட்டும் முன்பாக பெரிய பாத்திரத்தை வைத்து அதில் மணல் போன்ற ஒன்றினை கொட்டுகிறார்கள். பின்னர் வாழை இலை பரப்பி அதன் மீது எண்ணெய் ஊற்றுகின்றனர்.
எரியும் நெருப்பு
அந்த எண்ணெய் பாத்திரத்தில் துறவி ஏறி அமர்ந்து கொண்ட உடன் கீழே விறகுகளை அடுக்கிவைத்து தீ மூட்டுகின்றனர். கொளுந்து விட்டு எரியும் தீயில் எண்ணெய் கொதிக்கத் தொடங்குகிறது. ஆனாலும் புத்த துறவி கூலாக அமர்ந்து தியானம் செய்கிறார்.
பயபக்தியோடு
இதனை அதிசயத்தோடும் ஆச்சரியமாகவும் மக்கள் பார்த்து வணங்கினர். இறுதியில் துறவி அமர்ந்து தியானம் செய்த எண்ணெயை பிரசாதம் போல பாட்டில்களில் அடைத்து பெற்றுச் சென்றனர்.
தந்திர வேலையா?
எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு யூடியூப்பில் பகிரபட்டது. அது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ஆனால் இது சாத்திய மில்லை என்றும் ஏதோ தந்திர வேலை என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.