For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதற்கும் தயார்.. விமானப்படையை களமிறக்கிய இந்தியா.. லடாக் முழுக்க தீவிர ரோந்து.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து இரண்டு நாட்டு ராணுவ படைகளும் தீவிரமாக விமானப்படை சோதனைகளில் ஈடுப்பட்டு வருகிறது. நாளை இரண்டு நாட்டு ராணுவ லெப்டினன்ட் ஜெனரலுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் இப்படி விமான படை தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

Recommended Video

    லடாக் முழுவதும் இந்திய விமானப்படை தீவிர ரோந்து

    இந்தியா - சீனா எல்லை பிரச்சனை இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. தொடர்ந்து லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவும் தனது படைகளை அதிகமாக குவிக்க தொடங்கி உள்ளது.

    லடாக் அருகே இருக்கும் நதியான பாங்காங் திசோ பகுதியில்தான் படைகள் அதிகமாக குவிக்கப்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் 8 எல்லை கோட்டு பகுதிகளை யார் கட்டுப்படுத்துவது என்பதுதான் தற்போது சண்டைக்கு காரணமாக உள்ளது.

    18 வயது கூட நிரம்பாத சிறுவன்.. 28 வயது விவாகரத்தான பெண்.. மிரண்ட அதிகாரிகள்.. அதிர்ச்சியில் வேலூர்!18 வயது கூட நிரம்பாத சிறுவன்.. 28 வயது விவாகரத்தான பெண்.. மிரண்ட அதிகாரிகள்.. அதிர்ச்சியில் வேலூர்!

    சண்டைக்கு காரணம்

    சண்டைக்கு காரணம்

    பாங்காங் திசோ பகுதியில் பிங்கர்கள் (fingers) எனப்படும் 8 எல்லை கோட்டு பகுதிகள் உள்ளது. இதில் 4 பகுதியை இந்தியாவும், 4 பகுதியை சீனாவும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இதில் 8 பகுதியையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. சீனாவும் இதே விருப்பத்தோடு அங்கு அத்துமீறி வருகிறது. இது இல்லாமல் லடாக்கில் வேறு சில இடங்களிலும் சீனா திட்டமிட்டு அத்துமீறல்களை செய்து வருகிறது. இதுதான் சண்டைக்கு காரணம்.

    பேச்சுவார்த்தை நடத்த முடிவு

    பேச்சுவார்த்தை நடத்த முடிவு

    இந்த நிலையில் இரண்டு நாட்டு ராணுவமும் தற்போது பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த ராணுவத்தின் லெப்டினன் ஜெனரல் ரேங்க் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நாளை காலை பாங்காங் திசோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. முதல் முறையாக எல்லை பிரச்சனையில் லெப்டினன் ஜெனரல் ரேங்க் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கு பின் இரண்டு நாட்டு எல்லை பிரச்சனை முடிய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இரண்டு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லையில் விமானப்படை போக்குவரத்தை அதிகப்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்திய விமானப்படையின் நான்குக்கும் அதிகமான போர் விமானங்கள் வேகமாக இந்திய எல்லைக்கு அருகே சுற்றி வருகிறது. மிக தீவிரமான ரோந்து பணிகளை இந்திய ராணுவம் அங்கு செய்து வருகிறது. மிக் ரக விமானங்கள் சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது

    சீனாவின் செயல்

    சீனாவின் செயல்

    இன்னொரு பக்கம் சீனாவின் விமானமும் லடாக் அருகே சுற்றி வருகிறது. முக்கியமாக அக்சய் சின் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவமும் பறந்து வருகிறது. ஆனால் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் இரண்டு நாட்டு விமானங்களும் பறக்கவில்லை. அந்த 10கிமீ பகுதியில் அமைதி நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் தரைப்படையும் எப்போது போல குவிக்கப்பட்டு வருகிறது.

    ஏன் இப்படி குழப்பம்

    ஏன் இப்படி குழப்பம்

    இந்தியா சீனா இடையே ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்பாக இப்படி விமானப்படை ரோந்து பணிகள் நடக்கிறது. பாதுகாப்பு கருதி விமானப்படைகள் இப்படி சோதனை செய்கிறதா ? அல்லது பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் உடனடி பதில் தாக்குதலுக்கு தயார் ஆகும் வகையில் இரண்டு நாடுகளும் இப்படி தயார் ஆகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. எதற்கும் தயாராக இருக்கும் வகையில் இப்படி விமானப்படைகள் களமிறக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

    English summary
    India - China Standoff: Indian air force on the reinforcement in Ladakh amid Lt Gen-rank army officers meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X