For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க கவனிச்சிட்டுத்தான் இருக்கோம்.. லடாக் பிரிவால் கோபமடைந்த சீனா.. இந்தியா சொன்ன விளக்கம்!

லடாக் தனியாக பிரிக்கப்பட்டதால், சீனாவிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவிடம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ladakh issue | லடாக் பிரிவால் கோபமடைந்த சீனா.. இந்தியா சொன்ன விளக்கம்!

    பெய்ஜிங்: லடாக் தனியாக பிரிக்கப்பட்டதால், சீனாவிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவிடம் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் அதிகாரிகள் அவசர அவசரமாக சீன அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்த நிலையில் கடந்த வாரம் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. முக்கியமாக லடாக்கை தனியாக யூனியன் பிரதேசமாக அறிவித்தது தவறு என்று கூறியது. லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது எல்லை விதிகளுக்கு விரோதமானது என்று சீனா தெரிவித்து இருந்தது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இதையடுத்து நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இயை சந்தித்தார். இதில் காஷ்மீர் பிரச்சனை குறித்தும், காஷ்மீரை பிரித்தது குறித்து விவாதிக்கப்பட்டது.காஷ்மீரில் நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்கிறோம், அங்கு எல்லை விதிகள், ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளது என்று வாங் இ வெளிப்படையாக தெரிவித்தார்.

    கிடையாது

    கிடையாது

    இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் மட்டும்தான். சீனாவின் எல்லையில் நாங்கள் கை வைக்கவில்லை. லடாக் சீனா எல்லையில் எந்த விதமான மாற்றமும் நடக்கவில்லை. சீனாவின் அதிகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை.

    எப்படி பாகிஸ்தான்

    எப்படி பாகிஸ்தான்

    பாகிஸ்தான் இப்போதும் எல்லையில் அத்து மீறி வருகிறது. பாகிஸ்தான் செய்யும் நடவடிக்கைதான் எல்லை மீறலில் வரும். இந்தியா லடாக்கில் செய்தது உள்நாட்டு விவகாரம் மட்டுமே என்று அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கி உள்ளார். ஆனாலும் சீனா இன்னும் லடாக் விஷயத்தில் இந்தியா மீது கோபத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

    English summary
    India explains Ladakh status to China amidst new tension in the border with dragons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X