எல்லாம் சுயநலம்.. அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது.. சீன ஊடகம் அட்வைஸ்!
பெய்ஜிங்: அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது என சீன அரசின் ஊடகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா- சீனா- பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்திய எல்லையில் ஊடுருவி இந்தியாவின் கோபத்தை சீண்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி முதல் பாங்கோ சோ ஏரி பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்த போது இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றன.
எதுவும் நடக்க கூடாது.. இந்தியா அனுப்பிய உளவு டிரோன் விமானங்கள்.. லடாக் எல்லையில் தீவிர சோதனை!
இரு நாடுகள்
இதுகுறித்து இரு தரப்பு ராணுவத்தினரும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது தலையங்கத்தில் கூறுகையில் இருநாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு எல்லை பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது, நட்புறவுடன் நடந்து கொள்வது ஆகியவற்றை சீனா தனது நாட்டு கொள்கையாகவே வைத்துள்ளது.
இந்தியா
இந்த நிலையில் அமெரிக்காவால் இந்தியா முட்டாளாக்கப்படக் கூடாது. அமெரிக்கா எப்போதும் தனது நாட்டின் நலனுக்காக முயற்சிக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது. இரு நாடுகளை அதன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறது.
முட்டாள்
இந்தியா- சீனா எல்லை பிரச்சினையில் தங்களால் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என அமெரிக்கா காத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. எனவே அமெரிக்காவால் இந்தியா முட்டாளாக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் காட்டும் நட்புறவை திருப்பிக் கொடுக்க வேண்டும் என தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
காரணம்
இந்தியாவுடன் எப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க சீனா விரும்பவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அண்டை நாடுகளுடன் சுமூக நட்புறவை பேணுவது என்பதே சீனாவின் அடிப்படை கொள்கையாகும். இந்தியாவை எதிரியாக்க எங்களிடம் எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.