ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயமான இந்திய கடற்டை வீரர்.. தேடும் பணி தீவிரம்
Recommended Video
பெர்த்: ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோல்டன் குளோப் பந்தையத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருந்தார் அபிலாஷ். இந்திய குழுவிற்கு இவர்தான் கேப்டனாக செயல்பட்டார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட பந்தையம் இதுவாகும்.
மோசமான கடல் நிலை காரணமாக, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1900 கடல் மைல் தொலைவில், அபிலாஷ் படகில் பயணித்தபோது திடீரென காயமடைந்து மாயமாகிவிட்டார்.
இந்த பந்தையம் பிரான்ஸ்சில் ஜூலை 1ம் தேதி துவங்கி, உலகம் முழுக்க சுற்றும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்த உலகம் சுற்றும் போட்டியில்தான் அபிலாஷ் பங்கேற்றிருந்தார்.
ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அமைப்பினர், அபிலாஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.