For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடத்தையில் சந்தேகம்: நியூசிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்தியருக்கு ஆயுள்

By Siva
Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக இந்திய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் வசித்து வருபவர் இந்தியரான மந்தீப் சிங்(29). அவருக்கும் பர்மிதா ராணி(22) என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராணி நியூசிலாந்தில் வேலை செய்ததால் மந்தீப்பும் அங்கு சென்றார்.

Indian jailed for wife's murder in New Zealand

திருமணம் முடிந்ததில் இருந்தே மந்திப்புக்கும், ராணிக்கும் இடையே பிரச்சனையாக இருந்துள்ளது. ராணிக்கும், பர்மிந்தர் சந்து என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக மந்தீப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 22ம் ராணி ஆக்லாந்தில் உள்ள ஏடபுள்யூஐ சர்வதேச கல்வி குழும பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மந்தீப் ராணியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியை குத்தியுள்ளார். இதை பார்த்த தடுக்க வந்த சந்துவுக்கும் கத்திகுத்து விழுந்தது.

மந்தீப் கத்தியால் குத்தியதில் சந்துவின் நுரையீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இது குறித்த வழக்கில் மந்தீப் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து நீதிமன்றம் மந்தீப்புக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து தான் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை காலம் முடிந்த பிறகு மந்தீப் நாடு கடத்தப்படுவார்.

English summary
A New Zealand court on Tuesday sentenced a 29-year-old Indian-origin man to life in prison for murdering his.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X