எல்லா நாடுகளிலும் குவிந்து கிடக்கும் “இந்தியர்கள்” ... ஐ.நா. அறிக்கை
நியூயார்க்: உலக நாடுகளில் வாழும் வேற்று நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்று ஐ.நா.சபை தன்னுடைய ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி உலக அளவில் 24 கோடியே 40 லட்சம் பேர் அதாவது 2 கோடி அகதிகள் உள்பட தங்கள் சொந்த நாட்டை விட்டு அயல்நாடுகளில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முதலிடத்தில் இந்தியா:
இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி 1.6 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990 ஆம் ஆண்டு கணக்கை விட 67 லட்சம் அதிகமாகும்.

ஆசியாவின் 11 நாடுகள்:
இந்த பட்டியலில் மெக்சிகோ, ரஷ்யா, சீனா, வங்காளதேசம் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 20 நாடுகளில், 11 நாடுகள் ஆசியா கண்டத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாட்டவர்கள் அதிகம்:
வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர்களில் 3 இல் 2 பங்கு பேர் வெறும் 20 நாடுகளில் தான் வசிக்கின்றனர். இவ்வாறு அதிக வெளிநாட்டவர்களை தன்வசம் வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

52 லட்சம் பேர் இந்தியாவில்:
இந்த 20 நாடுகளில் இந்தியா 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 52 லட்சம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990 ஆம் ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications