எல்லா நாடுகளிலும் குவிந்து கிடக்கும் “இந்தியர்கள்” ... ஐ.நா. அறிக்கை
நியூயார்க்: உலக நாடுகளில் வாழும் வேற்று நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்று ஐ.நா.சபை தன்னுடைய ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி உலக அளவில் 24 கோடியே 40 லட்சம் பேர் அதாவது 2 கோடி அகதிகள் உள்பட தங்கள் சொந்த நாட்டை விட்டு அயல்நாடுகளில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முதலிடத்தில் இந்தியா:
இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி 1.6 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990 ஆம் ஆண்டு கணக்கை விட 67 லட்சம் அதிகமாகும்.

ஆசியாவின் 11 நாடுகள்:
இந்த பட்டியலில் மெக்சிகோ, ரஷ்யா, சீனா, வங்காளதேசம் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 20 நாடுகளில், 11 நாடுகள் ஆசியா கண்டத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாட்டவர்கள் அதிகம்:
வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர்களில் 3 இல் 2 பங்கு பேர் வெறும் 20 நாடுகளில் தான் வசிக்கின்றனர். இவ்வாறு அதிக வெளிநாட்டவர்களை தன்வசம் வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

52 லட்சம் பேர் இந்தியாவில்:
இந்த 20 நாடுகளில் இந்தியா 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 52 லட்சம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990 ஆம் ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications