மலேசியாவில் வீட்டில் பிணமாகக் கிடந்த இந்திய வம்சாவளி பெண், 7 மாத குழந்தை: கணவர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் மற்றும் அவரது 7 மாத பெண் குழந்தை வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மலேசியாவில் உள்ள செலங்கோர் மாநிலத்தில் இருக்கும் ரவாங் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி சீக்கியரான கமல்ஜித் துரைராஜா(33). அவரது 7 மாத மகள் இஷ்லின் கவுர். அவர்கள் இருவரும் வீ்ட்டில் பிணமாகக் கிடந்ததை கமல்ஜித்தின் மாமனார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். முதல்கட்ட விசாரணையை அடுத்து போலீசார் கமல்ஜித்தின் கணவரான லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.
கமல்ஜித்தும், அவரது மகளும் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் உண்மை தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.