For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்

Google Oneindia Tamil News

கராமா: துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6 வயது இந்திய சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பைசல் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 3 -வது மகன் முகம்மது பர்ஹான், அல்குவோஸ் என்ற இடத்தில் இயஙி வரும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தார்.

Indian School boy dies on Dubai bus

பள்ளி வாகனத்தில் நேற்று காலை 8 மணிக்கு முஹம்மது பர்ஹான் புறப்பட்டுள்ளார். பள்ளி வாகனத்திலேயே பர்ஹான் தூங்கியிருக்கிறார். இதை கவனிக்காத ஓட்டுநர், வாகனத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

மாலையில் மாணவர்களை அழைத்துச் செல்ல வாகனத்தை திறந்த போது பர்ஹான் உயிரற்ற நிலையில் கிடந்தார். இச்சம்பவம் துபாயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

பர்ஹானின் பெரிய அக்காவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த மரணம் அந்த குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

English summary
6 year Old Indian boy died after he was left behind in a Dubai School bus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X