இந்திய மாணவர்கள் ஏன் பிரிட்டனுக்கு அதிகம் செல்வதில்லை? யுகே-இந்தியா நிழ்வில் விவாதம்
கம்போடியாவின், இந்தியா ஹைகமிஷனர் தினேஷ் கே.பட்நாயக் கூறுகையில், இந்தியா ஒரே குரலில் பேச வேண்டும். அரசியல் தலைவர்களும் ஒருமித்து பேச வேண்டும் என்றார்.
லண்டன்: இந்தியா-யுகே வாரம் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
யுகே-இந்தியா வாரம் நிகழ்வில் இன்று ஓலா நிறுவன ஸ்ட்ராடெஜிக் தலைவர் ஆனந்த் ஷா பங்கேற்று பேசுகையில், "எந்த பணியாக இருந்தாலும், ஒரு அடையாளம் தேவை. சொந்த நாட்டை போலவே எந்த நாட்டில் குடியிருந்தாலும் அதையும் மதிக்க வேண்டும். உலகத்திற்கு உங்கள் மரபைதான் விட்டுச் செல்வீர்கள். நமது அடையாளங்களே நம்மை எடுத்துக் காண்பிக்கும் என்றார்.
கம்போடியாவின், இந்தியா ஹைகமிஷனர் தினேஷ் கே.பட்நாயக் கூறுகையில், இந்தியா ஒரே குரலில் பேச வேண்டும். அரசியல் தலைவர்களும் ஒருமித்து பேச வேண்டும். யுகே-இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, டெக்சேஜ், ஸ்டார்ட்அப் வளர உதவும். 25 பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க தயாராக உள்ளன.
இந்திய மாணவர்கள் உலகமெங்கும் போகிறார்கள், ஆனால் யுகே செல்வதில்லை. யுகே பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் செல்வதில்லை. இதை சரி செய்யலாம்.
ஒருவேளை ஐரோப்பாவுக்கு இந்திய மாணவர்கள் படிக்க வந்தாலும், இந்தியாவுக்கு பிரிட்டன் மாணவர்கள் செல்வதில்லை என்றார்.
இந்தியா ஐஎன்சி சிஇஓ மனோஜ் லட்வா கூறுகையில், பிரிட்டனுக்கான ஏற்றுமதியும் இந்தியாவுக்கு யோசனை தருவதாக உள்ளது என்றார்.