ஆஸ்திரேலியா: கைக்குழந்தையுடன் 29-மாடியில் இருந்து கீழே குதித்து இந்திய பெண் தற்கொலை!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் அங்குள்ள 29 மாடி அடுக்குக் குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ். இவர் தனது மனைவி சுப்ரஜா(31), 5 வயது மகள், 4 மாத ஆண் குழந்தையுடன் அங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 மாடி அடுக்குக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சுப்ரஜா தனது கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் சேர்ந்து வீட்டு பால்கனியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதில் சுப்ரஜா மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது. சுப்ரஜா தனது குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் சுப்ரஜாவின் உடலை கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.