இந்தோனேசியாவில் மோசமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு
இந்தோனேசியாவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
நிக்கோபார்: இந்தோனேசியாவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் பாலி, லாம்பாக் ஆகிய இரண்டு தீவுகளிலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்தோனேசியாவில் சும்பாவா பகுதியில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருக்கிறது.
சரியாக 15 நிமிடம் இந்த நிலநடுக்க உணரப்பட்டது. அந்த தீவில் உள்ள பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள், என்ன பாதிப்பு என்று முழு விவரம் வெளியாகவில்லை.
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. விரைவில் இதுகுறித்து விரிவான அறிவிப்பு வெளியாகும்.