யோகா குருவுக்கு விசா மறுப்பு: பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்குள் முடங்கிய யோகா தின கொண்டாட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சர்வதேச யோகா தினத்தன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நேற்று யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பிற நாட்டு தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
Celebration of International Day of Yoga in Islamabad #YogaDay pic.twitter.com/7XsH1D1EWK
— IndiainPakistan (@IndiainPakistan) June 21, 2015
காலை 7 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து 2 மணிநேரம் நடைபெற்றது. யோகா தினத்தை கொண்டாட பாகிஸ்தான் அதிகாரிகள் யோகா நிகழ்ச்சிக்கு முதலில் ஏற்பாடு செய்து பின்னர் அதை ரத்து செய்துவிட்டனர்.
யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து இஸ்லாமாபாத் செல்லவிருந்த யோகா குருவுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அதன் பிறகே இந்திய தூதரக அலுவலகத்திற்குள் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இது குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இஸ்லாமாபாத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் #YogaDay என்று தெரிவித்துள்ளது.