இண்டர்போல் தலைவரையே காணவில்லை.. சீனாவில் மாயம்.. உலக நாடுகள் அதிர்ச்சி!
சர்வதேச போலீஸ் படையான இண்டர்போல் படையின் தலைவர் மெங் ஹாங்வெய் காணாமல் போய் இருக்கிறார்.
பெய்ஜிங்: சர்வதேச போலீஸ் படையான இண்டர்போல் படையின் தலைவர் மெங் ஹாங்வெய் காணாமல் போய் இருக்கிறார்.
சர்வதேச போலீஸ் மற்றும் விசாரணை படையான இண்டர்போலின் தலைவராக மெங் ஹாங்வெய் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2016ம் வருடம் தேர்வானார்.
இவர் சீனாவை சேர்ந்தவர். இவருக்கு 64 வயது ஆகிறது. இவர் சீனாவின் மக்கள் பாதுகாப்பு துறையின் துணை அமைச்சராகவும் இருக்கிறார்.
காணவில்லை
இவரது பதவிக்காலம் 2020ல் முடிகிறது. இவர் தனது மனைவியுடன் பிரான்சில் உள்ள லயன் பகுதியில் வசித்து வந்தார். அங்கு இண்டர்போல் தலைமையகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி சீனா சென்ற இவர் காணாமல் போய் இருக்கிறார்.
விசாரணை நடத்தினர்
அங்கு சென்றதில் இருந்தே இவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மனைவி பிரான்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரான்ஸ் போலீஸ் இதற்காக தனி விசாரணை படையையும் உருவாக்கி உள்ளது.
முன்னாள் தலைவர்
இவர் சீனாவில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டவர். சீனாவின் தீவிரவாத எதிர்ப்பு படையின் முன்னாள் தலைவர் ஆவார். அதேபோல் போதை பொருள் தடுப்பு பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போது இவர் சிறப்பாக பணியாற்றியதால் இவர் இண்டர்போலின் தலைவர் ஆனார்.
கடத்தலா?
இந்த நிலையில் இவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் இவரை கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்து வருகிறது. வேறு சில காரணங்களுக்காக இவர் சீனாவில் கைது செய்ய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகிறது.