3 குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை.... உறவினர்கள் கண்ணீர்
Recommended Video
ரியாத்: சவுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பொழிக்கரை சுதர்சன், குளச்சல் சகாயபீட்டர், கொல்லங்கோடு கிறிஸ்துஅடிமை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால், பல்வேறு இன்னல்களை தமிழக மீனவர்கள் சந்தித்து வருவது தொடர்கதையாகி உள்ளன. அதே நேரம், வெளிநாடுகளுக்குச் சென்று தங்கி, மீன் பிடிக்கும் மீனவர்கள் திசை மாறிச் செல்வதால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களில் மட்டும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஈரான் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் மீட்டு தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.