சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!
ஈராக்கில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் பெண் ஒருவர்.
Recommended Video
பாக்தாத்: ஈராக் பெண் ஒருவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்த யுசுப் பத்லே என்பவருக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவரது மனைவி கர்ப்பமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஆறு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை ஆகும்.
பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள், அதுவும் சுகப்பிரசவம் என பலர் ஆச்சர்யத்தையும், அக்குழந்தைகளுக்கும், அவரது தாய்க்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன் னர் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவின் இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.
இதேபோல், கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தது. அவற்றில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.