For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆற்றில் கலந்த வயாகரா மாத்திரைகள்.. குடித்து விட்டு வெறியேறிய ஆடுகள்.. ஒரு வாரமாக "நான் ஸ்டாப்" ஜாலி

Google Oneindia Tamil News

டப்லின்: அயர்லாந்து நாட்டில் ஒரு ஆற்றில் நீரில் வயாகரா மாத்திரைகள் கலந்திருந்த நிலையில் அதை குடித்த செம்மறி ஆடுகள் ஒருவாரத்துக்கு கட்டுப்பாடே இல்லாமல் உறவில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

தெற்கு அயர்லாந்தில் ரிங்காஸ்கிடி துறைமுகம் அருகே கூட்டம் கூட்டமாக ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றன. அப்போது அங்கிருந்த ஆற்று நீரை அவை குடித்தன.

இதையடுத்து சிறிது நேரத்தில் அனைத்து ஆடுகளும் உறவில் ஈடுபட்டன. சில ஆடுகள் துணை கிடைக்காமல் கடும் அவதி அடைந்து ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டன.

உணவு கூட அருந்தாமல்

உணவு கூட அருந்தாமல்

இதை பார்த்த ஆடுகளின் சொந்தக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. இதே நிலைதான் அடுத்த நாளும் நிலவியது. உணவுக் கூட அருந்தாமல் உறவிலேயே ஆடுகள் குறியாக இருந்தன.

பாலியல் உறவில்

பாலியல் உறவில்

இதையடுத்து ஆடுகளின் அசாதாரண நடவடிக்கைகளால் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்த ஆடுகள் அனைத்தும் வெறி பிடித்தது போல் பாலியல் உறவில் ஈடுபட்டன.

நீர் ஆய்வுக்கு

நீர் ஆய்வுக்கு

இது ஒரு வாரத்தை கடந்ததால் ஆடுகள் குடித்த நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அப்போதுதான் அந்த ஆற்றில் வயாகரா கழிவுகள் கலந்திருப்பது தெரியவந்தது.

வயாகரா கழிவுகள்

வயாகரா கழிவுகள்

பிரபல மருந்து உற்பத்தி நிறுவனம் 755 டன்னுக்கும் அதிகமான வடிகட்டப்படாத வயாகரா கழிவுகளை ரிங்காஸ்கிடி துறைமுகம் அருகே நீரில் கொட்டியதை ஒப்புக் கொண்டது.

செம்மறி ஆடுகள்

செம்மறி ஆடுகள்

வயாகரா கழிவுகள் கலந்த நீரை குடித்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும்,பிற கால்நடைகளும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த ஆடுகளும் கால்நடைகளும் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
Ireland Sheeps went on a week long sex after they drink water from a river in where drug manufacturer adds spills of Viagra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X