குவைத்தில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் அறிமுக விழா
குவைத்: குவைத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அறிமுக விழா நடைபெற்றது.
குவைத்தில் உள்ள இந்தியன் இன்டெக்ரேடெட் பள்ளி அரங்கத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அறிமுக விழா கடந்த 13ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு திரு. அம்ஜத் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் திரு. சயித் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மத்திய குழு தலைவர் திரு. அப்துல்சலாம் (கேரளா), துணை தலைவர் திரு. அலாவுதீன் (பீகார்), பொது செயலாளர் திரு. அம்ஜத் அலி (தமிழ்நாடு), செயலாளர்கள் திரு. தாய்ஃப் அஹ்மத் (கேரளா) மற்றும் திரு. ஷமீர் (கர்நாடகா). மேலும் வட மாநில தலைவர் திரு. ஷாஜஹான் (ஆந்திரா), பொது செயலாளர் திரு. அமானுல்லா குர்நூல் (ஆந்திரா). தமிழ் மாநில தலைவர் திரு. ஷகீல், பொது செயலாளர் திரு. சிக்கந்தர் பாட்ஷா. கேரளா மாநில தலைவர் திரு. முஹம்மத் முஸ்தபா, பொது செயலாளர் திரு. ஷாநவாஸ். கர்நாடகா மாநில தலைவர் திரு. ரபீக் மான்ஜி, பொது செயலாளர் திரு. இம்தியாஸ் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அடுத்ததாக சிறப்பு அழைப்பாளர்களான எஸ்டிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் திரு. பாய்ஜி, திரு. இலியாஸ் மற்றும் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. அப்துல் ஹமீத் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ச்சியாக இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தலைவர் திரு. சலாம் அவர்கள் தங்களுடைய பணிகள் பற்றிய விளக்க உரை நிகழ்த்தினார். இறுதியாக திரு. தாயிஃப் அஹமத் அவர்களின் நன்றி உறையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. திரு. ஷமீர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.