இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அல்ஹஸ்ஸா கிளை துவக்கம்!
தம்மாம்: கடந்த 29ம் தேதி மாலை இந்தியன் சோஷியல் ஃபோரத்தின்(ஐஎஸ்எஃப்) அல்ஹஸ்ஸா கிளை ஹிதாயத்துல்லாஹ் திருமறை வசனம் ஓதி அதன் பொருள் கூறி துவக்கப்பட்டது.
யூசுப்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிரை ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஐஎஸ்எஃப் கிழக்கு மாகாண பொதுச் செயலாளர் திப்பு சுல்தான் அறிமுக உரையுடன் துவங்கிய கூட்டத்தில் அல்ஹஸ்ஸா கிளையின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து இந்திய அரசியல் சூழ்நிலைகளும், மாற்று அரசியலின் அவசியமும் என்ற தலைப்பில் ஃபோரத்தின் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்பு பேருரை ஆற்றினார்.
அஸாருதீன் நன்றி கூறினார். அல்ஹஸ்ஸா கிளை புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தலைவர்: நாசர் (இலந்தங்குடி)- பொதுச் செயலாளர், யூசுப்கான் (முத்துப்பேட்டை)- செயலாளர், ஜின்னா (புளியங்குடி), ஹிதாயத்துல்லாஹ் (மதுரை), பெரோஸ் (புளியங்குடி), மீரான்(கடையநல்லூர்), ரியாஸ் (அதிரை) ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.