வியன்னா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு
வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே 6 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலகின் மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.
வியன்னாவின் தேவாலயப் பகுதியில் 6 இடங்களில் கண்மூடித்தனமாக மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் பலியாகினர். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்தனர்.
தற்போது இந்த தாக்குதலுக்கு உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபுதாங் அல்பேனி எனவும் அறிவிக்கப்பட்டு அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்சில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வருகின்றன
இந்த புகைப்படத்தில் பயங்கரவாதி அல்பேனி, தானியங்கி துப்பாக்கி, கூரிய ஆயுதம், பிஸ்டல் ஆகியவற்றை கையில் வைத்திருக்கிறார்.