இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொலை செய்ய ஐஎஸ் திட்டம்: திடுக் தகவல்
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வரும் சனிக்கிழமை கொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் மீடியா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் சதித்திட்டங்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக பகுதிநேர பத்திரிக்கையாளர் ஒருவர் ஜிஹாதில் ஈடுபாடு உள்ளது போன்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாபாத்திரத்தை கற்பனையாக உருவாக்கி ஆன்லைனில் தகவல்களை வெளியிட்டு வந்தார்.
ஜிஹாத் பற்றி அந்த கற்பனை கதாபாத்திரங்கள் வெளியிடும் தகவல்களை பார்த்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உண்மை என நம்பி அவர்களுக்கு தீவிரவாத செயல்களை நடத்த பணம் மற்றும் ஆயுதம் சேகரிப்பது குறித்த விளக்கம் அடங்கிய ஆவணங்களை அனுப்பி வைத்தனர்.
சிரியாவில் தீவிரவாதிகளை பணியமர்த்தும் ஜுனைத் ஹுசைன்(21) அந்த கற்பனை கதாபாத்திரங்களை உண்மை என நினைத்து அவர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார். ஜுனைதின் மனைவி சாலி ஜோன்ஸ் பெண் தீவிரவாதிகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலி தான் வரும் சனிக்கிழமை ஜாப்பானை வெற்றி கொண்ட தின கொண்டாட்டங்கள் நடக்கையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொலை செய்யும் திட்டத்தை அனுப்பி வைத்தார். தாக்குதலை நடத்த 2 முதல் 3 தீவிரவாதிகள் ஏற்கனவே இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் இங்கிலாந்தில் இருந்து ஆட்களை சிரியாவுக்கு அழைப்பதற்கு பதில் அவர்களை அங்கேயே தங்க வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளு.