செக்ஸ் வைக்க மறுத்த 17 வயது சிறுமியின் தொடையில் வெந்நீரை ஊற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: உடலுறவு கொள்ள மறுத்த 17 வயது சிறுமியின் தொடையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெந்நீரை ஊற்றிய கொடுமை நடந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பொதுமக்களை தலையை துண்டித்து கொன்று வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன், சந்தையில் செக்ஸ் அடிமைகளாக விற்று விடுகின்றனர்.
இது குறித்து தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிவந்துள்ள 17 வயது யசிதி சிறுமி கூறுகையில்,
பலாத்காரம்
நானும், என் தங்கையும் தீவிரவாதிகளின் பிடியில் 9 மாதங்கள் நரக வேதனை அனுபவித்தோம். அவர்கள் தினமும் என்னையும், என் தங்கையையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் எங்களை ஏலத்தில் விட்டுவிட்டனர்.
வெந்நீர்
என்னை பல தீவிரவாதிகள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அது மட்டுமின்றி அவர்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யாத போது எல்லாம் என் தொடையில் வெந்நீரை ஊற்றினர். நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன். கருவை கலைப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
கொடுமை
குர்ஆனில் இருந்து சூராக்களை ஒப்பிக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு ஒப்பிக்கையில் என்னை வாங்கிய அல் ருஸியா என்பவரும், அவரது பாதுகாவலர்களும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள். மொசுல் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், சிறுமிகளுடன் என்னை கைவிலங்கு போட்டு அடைத்து வைத்திருந்தனர்.
கன்னிகள்
கன்னித்தன்மையுடன் இருப்பவர்களை 40 ஆண்களுடன் ஒரு அறைக்குள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தங்களுக்கு எந்த கன்னி வேண்டுமோ அவரை பார்த்து கைகாட்டுவார்கள்.
பாவி
அல் ருஸியா தினமும் காலை பெண்கள் மற்றும் சிறுமிகளை நிர்வாணமாக்கி வரிசையாக நிற்க வைப்பார். அவர்களை முகர்ந்து பார்த்து அதில் யாருடன் அன்று உடலுறவு கொள்வது என்பதை முடிவு செய்வார். அவர் ஒருவரை தேர்வு செய்த பிறகு மீதமுள்ளவர்களுடன் அவரது பாதுகாவலர்கள் உறவு கொள்வார்கள்.
உணர்ச்சியே இல்லை
தீவிரவாதிகள் என்ன செய்ய சொன்னாலும் செய்ய வேண்டும். இல்லை எனில் அடித்து துன்புறுத்துவார்கள். அவர்களிடம் அடி வாங்கி வாங்கி மறத்துப் போய்விட்டது. தற்கொலை செய்து கொள்ளலாம் போன்று இருந்தது என்றார் அந்த சிறுமி.
விடுதலை
கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சார் அருகே பெஷ்மெர்கா படையினர் நடத்திய தாக்குதலில் அல் ருஸியா மற்றும் அவரது பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அவரது பிடியில் இருந்த பெண்கள், சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர்.