காஸாவில் 'போர்க் குற்றங்களில்' இஸ்ரேல் ஈடுபட்டிருக்க வாய்ப்பு: நவநீதம் பிள்ளை
ஜெனிவா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி கடந்த 15 நாட்களாக இஸ்ரேலின் குண்டு மழைகளால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் வெறியாட்டம்...
- சுமார் 700க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பச்சிளங்குழந்தைகள்.
- சுமார் 5 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துவிட்டனர்.
- புற்றுநோயை உருவாக்கக் கூடிய வெண்பாஸ்பரஸ் கொத்து குண்டுகளையும் இஸ்ரேல் வீசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐநாவின் தலையீடு
- இந்த நிலையில்தான் இஸ்ரேலின் காஸா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றி இருக்கிறது.
- மேலும் காஸாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
- காஸா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்கியதை நவநீதம்பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.
- மேலும் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார் நவநீதம் பிள்ளை.