For Quick Alerts
For Daily Alerts
Just In
பாலஸ்தீன மக்களை சொந்த மண்ணை விட்டு வெளியேறச் சொல்லி இஸ்ரேல் அட்டூழியம்!!
காஸா: வடக்கு காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அட்டூழியமாக உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் குண்டுமழை 200க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல். இனப்படுகொலை செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் உலக நாடுகள் இதுபற்றி கண்டுகொள்ளாமல் வாய்மூடி மவுனியாக இருந்து வருகிறது.
அத்துடன் காஸா பகுதிக்குள் இஸ்ரேலிய தரைப்படை உள்ளே நுழைந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடக்கு காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் அனைவரும் தங்களது சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து செல்ல இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் தங்களது வாழ்விடங்களை கைவிட்டு அகதிகளாக பாலஸ்தீன மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
Comments
English summary
Israel has ordered thousands of Palestinians in eastern and northern Gaza to leave their homes as airstrikes continue, a media report said on Wednesday.
Story first published: Wednesday, July 16, 2014, 13:31 [IST]