Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லெறிந்த ஹிஸ்புல்லா.. இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்..யாரிந்த வஃபிக்?

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழு மீது உக்கிரமான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 117 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

israel hezbollah international

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. போர் விமானங்கள், ராக்கெட் லாக்கர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 900-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ள நிலையில் தரைவழி தாக்குதலிலும் இஸ்ரேல் அதிரடியாக இறங்கியுள்ளது. இதன் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். இதுவரை நடந்துள்ள தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியாகி இருப்பதாகவும், போர் நிறுத்தத்திற்கான நேரம் இது, அமைதி பேச்சு வார்த்தைக்கு லெபனான்-இஸ்ரேல் முன் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில் கடந்த நில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதியான முகமது உசைன் ஸ்ரோர் பலியானார். மேலும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மகளும், மருமகனும் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள், இரண்டாம் கட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டதாக இஸ்ரேல் கொக்கரித்தது. இருந்த போதும் சில முக்கிய தலைவர்கள் மறைந்து இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை வழி நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக முக்கிய தலைவரான அந்த அமைப்பின் வஃபிக் சஃபா என்பவர் இஸ்ரேலுக்கு எதிராக முக்கிய திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு, பிற நாடுகளை தொடர்பு கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கண்டறிந்த நிலையில் வஃபிக் சஃபா குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அருகே பெய்ரூட்டில் வஃபிக் சஃபா மறைந்திருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது அடுத்து நேற்று இரவு முதல் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் இந்த தாக்குதலில் இருந்து வஃபிக் சஃபா நூலிழையில் தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காசா மற்றும் லெபனான் மீது அப்பட்டமான மனித உரிமை மீறலை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும், அந்நாடு மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்களை செய்து வருவதாக ஐநா கூறி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+