சிறுமிகளுடன் ‘ஜாலி’... ஆண்டுதோறும் ‘செக்ஸ் சுற்றுலா’ செல்லும் 80,000 இத்தாலியர்கள்
ரோம்: உலக அளவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆங்காங்கே சின்னஞ்சிறு குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கேள்விப்படுவது அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி வருகிறது. இது காமக் கொடூரர்களின் அசுர முகத்தை உலகிற்கு காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில், சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு ‘செக்ஸ் சுற்றுலா' செல்வதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று ஆய்வில் வெளியாகியுள்ளது.
சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து 'எக்பட் இட்டாலியா' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் வன் கொடுமைகள்....
உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சிறுமிகள் கடத்தல்...
மேலும், உலகளாவிய அளவில் கடத்தப்படும் சிறுமிகள், பெரும்பாலும் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதையும் இது சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.
செக்ஸ் சுற்றுலா....
இத்தாலி, சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் 'செக்ஸ் சுற்றுலா' செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாம்.
80,000 இத்தாலியர்கள்....
அந்த வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
கிளை அமைப்புகள்....
'எக்பட் இட்டாலியா' தொண்டு நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.