பீதியை கிளப்பும் இத்தாலி.. ஒரே நாளில் 32,616 பேருக்கு கொரோனா தொற்று.. இதுவரை 9,35,104 பேர் பாதிப்பு
ஒரே நாளில் இத்தாலியில் 32,616 பேருக்கு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்
ரோம்: நாளுக்கு நாள் பீதியை கிளப்பும் இத்தாலியில் மேலும் 32,616 பேர் ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. இது அந்நாட்டு மக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.. அதேபோல, டிஸ்சார்ஜ் ஆகி செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இத்தாலியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன... என்றாலும், இத்தாலியில் கடந்த சில தினங்களாக பாதிப்பு மட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது..
நேற்று முன்தினம் இத்தாலியில் மொத்தம் 39,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது 32,616 பேருக்கு தொற்று மேலும் உறுதியாகி உள்ளது.. அதன்படி, இதுவரை இத்தாலியில் மொத்தம் 9,35,104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 41,394 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.. குறிப்பாக இத்தாலியின் லோம்பார்டி பகுதிதான் தொற்றால் ரொம்ப மோசமாக பாதிப்பட்ட நகரமாக இருக்கிறது.. அங்கு கடந்த சனிக்கிழமை மொத்தம் 11,489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போதைய நிலவரப்படி 6,318 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, ரஷ்யாவிலும் தினமும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது... அங்கு நேற்று காலை வரை ஒரே நாளில் 20 ஆயிரத்து 498 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது... இதன் மூலம் ரஷியாவின் மொத்த பாதிப்பு 17 லட்சத்து 74 ஆயிரத்து 334 ஆகி உள்ளது.
உலக அளவில் 5 கோடி பேரை தாண்டியது கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் 85 லட்சத்தை தாண்டியது
கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 492 பேர் குணமடைந்து உள்ளனர்... 286 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவில், மாஸ்கோவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.. நேற்று ஒரே நாளில் 5,751 பேர் தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.