யாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது
பலாலி: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் அதிகாரப்பூர்வமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக சோதனை ஓட்டமாக இந்தியாவின் அல்லையன்ஸ் ஏர் விமானம் அங்கு நேற்று தரை இறங்கியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையமானது இந்தியாவின் உதவியுடன் சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் நாளை முதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
முதலில் வட இந்திய நகரங்களுக்கு மட்டும் பலாலியில் இருந்து பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் தமிழர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்
பலாலி விமான நிலையமானது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரும் மாற்றப்பட்டது. இந்த விமான நிலையத்துக்கு ஏர் இந்தியாவின் அல்லையன்ஸ் ஏர் விமானம் ஒன்று சோதனை ஓட்டமாக நேற்று தரை இறங்கியது.
விமானத்தில் வந்திறங்கிய வல்லுநர்கள் குழு விமான நிலைய ஓடு பாதை, சிக்னல் கருவிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது.