ஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு!
Recommended Video
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஓகைடோவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக அங்கு மிக சிறிய அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 7 மணிக்கு ஜப்பானில் உள்ள ஓகைடோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்துள்ளது.
ஆனால் உயிரிழப்பு இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மீட்பு பணியினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து உள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.