எங்களை காப்பாற்றுங்கள்.. காபூல் ஹோட்டலில் இருந்து வந்த போன்.. தீவிரவாத தாக்குதலில் நடந்த சோகம்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த 11 மணிநேரமாக தீவிரவாதிகள் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர்.
தற்போது தாக்குதலை ராணுவத்தினர் கஷ்டப்பட்டு முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த தாக்குதல் நடந்த போது பத்திரிக்கையாளர்களுக்கு உள்ளே இருந்து ஒருவர் கால் செய்து இருக்கிறார். அவர் உதவி கேட்கும் போன் கால் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
நடந்தது என்ன
அந்த ஹோட்டலுக்கு நான்கு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஐந்து மாடி கட்டிடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இருந்த ஊழியர்கள், வெளிநாட்டு பயணிகளை அடைந்து வைத்துள்ளனர்.
போன் கால்
இந்த தாக்குதல் தொடங்கிய போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு போன் கால் ஒன்று வந்து இருக்கிறது. அதில் ''நான் இந்த ஹோட்டலுக்குள் மாட்டி இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.'' அவருடைய பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை.
என்ன விவரம்
அவர் போன் காலில் நிறைய விவரங்கள் சொல்லியுள்ளார். அதில் ''இங்கு நான்கு தீவிவாதிகள் இருக்கிறார்கள். நான் ஒளிந்து கொண்டு இருக்கிறேன். அவர்கள் நிறைய பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறார்கள். பயங்கர ஆயுதம் வைத்துள்ளார்கள்'' என்று கூறியுள்ளார்.
அணைத்து வைக்கப்பட்டது
இந்த தகவல் உடனடியாக ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கால் செய்யும் போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது ராணுவத்திற்கு தெரியாமல் இருக்கிறது. இவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இன்னொரு போன்கால்
இந்த தாக்குதலின் போது இன்னொரு போன்காலும் வந்துள்ளது. அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பணியாளர் தன் நண்பருக்கு கால் செய்து இருக்கிறார். அதில் ''தீவிவாதிகள் எல்லோரையும் சுடுகிறார்கள். பலரை தூக்கி சென்று அடைந்து வைத்து இருக்கிறார்கள். விருந்தினர் மாளிகையில் தற்போது இருக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார்.