ரஜினியின் ஆன்மீக அரசியல் காவி அரசியலாக இருக்காது என நம்புகிறேன்... கமல்
எனது நிறம் காவி இல்லை என்பதை போல் ரஜினியின் நிறமும் காவியாக இருக்கக் கூடாது என்று கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
வாஷிங்டன்: ரஜினியின் ஆன்மீக அரசியல் காவி அரசியலாக இருக்கக் கூடாது என்று நம்புகிறேன் என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேசினார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வட் பல்கலைகழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சி அரங்கத்தில் கமல்ஹாசன் வேட்டி, சட்டையில் வரும்போது "தலைவர் வாழ்க" என மாணவர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது அவர் பேசுகையில், நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. அவருடன் கூட்டணி என்பது அவரது கொள்கைகளை வைத்தே முடிவு செய்ய முடியும்.
ரஜினியின் நிறம்
எனது நிறம் காவி நிறமாக இருக்காது. அதுபோல் ரஜினியின் ஆன்மீக அரசியலும் காவி அரசியலாக இருக்கக் கூடாது என்பதை நம்புகிறேன்.
தேர்வு செய்வது என் உரிமை
தமிழன் என்பது விலாசமே தவிர தகுதி அல்ல. எனக்கு என்ன வேண்டும் என தேர்வு செய்வது எனது உரிமை. அதனை பிறர் தீர்மானிக்கக்கூடாது.
ஒரு கிராமத்தை தத்தெடுப்பு
2018ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான், கிராமங்களிலிருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போகிறோம்.
முன்னோடி கிராமம்
தத்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர். தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கிய கமல்ஹாசன் நாளை நமதே என்று உரையை முடித்தார்.