For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாய்க்கு ஐஸ் கிரீம் ஊட்டிய மகன்... சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ச், நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்ததால் அரச குடும்ப தம்பதிகளுக்கு, விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோரின் மகன் ஜார்க்கு நேற்று மூன்றாவது பிறந்த நாள். குட்டி இளவரசனின் பிறந்தநாளை தம்பதிகள் விமரிசையாக கொண்டாடினர்.

 Kate and William Accused Of Animal Cruelty After Releasing New Photos Of George

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அதில் குட்டி இளவரசர் ஜார்ஜ், நாய்க்கு சாக்லேட் ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த புகைப்படம் தான் தம்பதிக்கு தற்போது சிக்கலை உண்டாக்கிவிட்டது.

பால் பொருட்களால் செய்யப்பட்ட அந்த சாக்லேட் ஐஸ் கிரீம் விலங்குகளுக்கு அலர்ஜி என்பதால், விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குட்டி இளவரசனை சாக்லேட் ஐஸ் கிரீம் ஊட்ட அனுமதித்த இளவரசர் தம்பதிகள் வில்லியம்-கேத்தை விலங்கின ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

குட்டி இளவரசன், நாயை கொல்ல முயற்சிப்பதாக சிலர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். குட்டி இளவரசரை ஐஸ்கிரீம் ஊட்ட அனுமதித்த தம்பதியினர், கொடூரமானவர்கள் என்றும், நாயை கொல்ல முயற்சிக்கிறார்கள் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

English summary
William and Kate accused of animal cruelty in photo for George's 3rd birthday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X