13 வயது கன்னி சிறுமிகளை கொண்ட இன்ப படை.. தாத்தா முதல் கிம் வரை ஆடிய காமக் களியாட்டம்!
பியாங்கியாங்: 13 வயது முதல் 14 வயதுடைய பள்ளி பருவ சிறுமிகளை பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொள்ள இன்ப படை பிரிவு ஒன்றை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உருவாக்கியிருந்தாராம். இது ஒன்றும் புதிதல்ல. அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் உருவாக்கிய படைகளை இவர் "புதுப்பித்துள்ளார்" என்கிறார்கள்.
Recommended Video
கிம் ஜாங் உன்... சர்வாதிகாரியான இவர் ஆபத்தான அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தார். கடந்த மாதம் இவர் காணாமல் போயிருந்தார். இவர் இறந்துவிட்டதாகவே செய்திகள் சொல்லப்பட்டன. ஆனால் அனைத்து செய்திகளையும் யூகங்களையும் பொய்யாக்கிவிட்டு கில்லி மாதிரி ஒரு விழாவில் கலந்து கொண்டார் உன்.
இவர் 13 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளை இன்ப படை பிரிவு என்ற பெயரில் உருவாக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் 2000 சிறுமிகள் இருந்தனர். இவர்கள் பொதுவாக விழாக்களில் பாட்டு பாடியும் டான்ஸ் ஆடியும் மக்களை குஷிப்படுத்துவர்.
சூப்பர்.. ஒரே திட்டத்தில்.. அசரடித்த மத்திய அரசு.. புலம்பெயர் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பு
பாலியல் ரீதியில்
இந்த சிறுமிகளை பாலியல் ரீதியாகவும் கிம் ஜாங் உன் பயன்படுத்தி காமகளியாட்டம் ஆடுவார் என கூறப்படுகிறது. 13, 14 வயதுடைய இந்த சிறுமிகள் பள்ளியிலிருந்து நேரிடையாக அழைத்து செல்லப்படுவர். இந்த படையில் சேருவது ஒன்றும் சும்மா இல்லை. ஒவ்வொரு சிறுமியும் இந்த படையில் சேருவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கப்படுவர். அதில் அவர் கன்னித்தன்மை கொண்டவர் என்ற சான்றிதழை பெற வேண்டும்.
கவர்ச்சி
இந்த படை இவரது தாத்தா காலத்திலிருந்தே இருக்கிறது. வடகொரியாவை தோற்றுவித்தவரான கிம் இல் சங் இந்த இன்பப் படை அல்லது கிப்பும்ஜோ படையை உருவாக்கினார். 1970-களிலேயே அவர் உச்சத்தில் இருந்த போது பாட்டு பாடவும் டான்ஸ் ஆடவும் கவர்ச்சியாக உள்ள சிறுமிகளை அழைத்து வருமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார்.
வலிமை
அவ்வாறு வரும் சிறுமிகள் பணிப்பெண்களாகவும் பணியாற்றுவர். மேலும் அதிக கவர்ச்சியாக உள்ள பெண்கள் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி வந்தார். கிம் இல் சங் கன்னித்தன்மையுடைய இளம் பெண்களையே குறிவைத்தார். அவர்களுடன் உறவு கொண்டால் அவர்களுடைய உயிர் சக்தியை பெற்று உற்சாகத்தையும் வலிமையையும் பெற முடியும் என நம்பினார்.
ராணுவம்
இவருடைய சொகுசு மாளிகைகளில் தங்க வைக்கப்படும் இந்த சிறுமிகள் அவர்களின் கட்டளைக்கேற்ப நடந்து கொள்வர். இவர்களின் பெற்றோரிடம் தங்கள் பெண்களை கிம் இல் சங்கிற்கு சேவை செய்யும் முக்கியமான திட்டத்திற்கு அழைத்து செல்வதாக அதிகாரிகள் கூறுவர். அதற்கு பெற்றோரும் மறுபேச்சு பேசாமல் அனுப்பி வைப்பர். 20 வயதை அடையும் இந்த பெண்கள் "அந்த" வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவர். இவர்களை அந்த நாட்டு ராணுவத்தினர் திருமணம் செய்து கொள்வர்.
நாசம்
இன்பப் படைக்கு அழைத்து செல்லப்படும் சிறுமிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவர். சிலர் வெளிநாடுகளுக்கும் பயிற்சிக்கு செல்வர். இதில் மூன்றாம் பிரிவை சேர்ந்தவர்களே பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொள்ளப்படுவர். கிம் இல் சங் இறந்தவுடன் அவரது மகனும் கிம் ஜாங் உன்னின் அப்பாவுமான கிம் ஜாங் இல் பராமரித்தார். இவர்கள் மட்டுமல்லாது கிம் வம்சத்தை சேர்ந்தவர்களும் சிறுமிகளை நாசப்படுத்தியுள்ளனர்.
ரகசியங்கள்
பார்ட்டிகளில் வயிறு முட்ட உண்பது, மூச்சு முட்ட குடிப்பது, இந்த சிறுமிகளின் நடனத்தை பார்ப்பது இதுதான் கிம் வம்சத்தின் வேலை என்கிறார்கள். கிம்மின் தந்தை, தாத்தாவுடன் நெருக்கமாக இருந்த சிறுமிகளுக்கு அவர்கள் குறித்த ஏராளமான ரகசியங்கள் தெரியும். ஆனால் 20 வயதில் ஓய்வு பெற்று வீடு திரும்பும் போது இந்த ரகசியங்களை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டல் விடுத்து அனுப்புவராம்.
பெண்கள்
அப்பா காலத்தில் இருந்த இன்பப் படைகளை கலைத்து விட்டு புதிதாக 13, 14 வயது சிறுமிகளை சேர்த்திருந்தாராம் கிம் ஜாங் உன். இந்த பெண்களுக்கு மாத ஊதியமாக 4000 டாலர் வழங்கப்பட்டதாம். இந்த தொகை வறுமையில் வாழும் வடகொரியாவில் மிகப் பெரிய தொகை என கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் கழித்து இந்த இன்பப் படை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.