அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மவுனம் காத்த கிம் ஜாங்
அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்த கேள்விக்கு கிம் ஜாங் உன் பதிலளிக்கவில்லை.
Recommended Video
சிங்கப்பூர்: அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்தார்.
சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இருநாட்டு அதிபர்களும் முதலில் காலையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது நமது கூட்டணி வெற்றிகரமாக அமையும்; இருநாடுகளும் ஒன்றாக பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன் என கிம்மிடம் ட்ரம்ப் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை இருவரும் சந்தித்தனர். அப்போது அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுமா? என்ற கேள்விக்கு கிம் எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்தார். இரு தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்துகின்றனர்.