சதம் அடித்ததும் சட்டைக்குள் இருந்து ஒரு பொருளை எடுத்து முத்தமிட்டாரே கோஹ்லி, என்ன தெரியுமா?
Recommended Video
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, அதன்பிறகு செய்த ஒரு செயல் வைரலாகியுள்ளது.
விராட் கோஹ்லி மிகப்பெரிய சர்வேதச கிரிக்கெட் வீரர் என்றபோதிலும், இங்கிலாந்து மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசியதில்லை என்ற குறை இருந்தது. பந்து நன்கு ஸ்விங் ஆகக்கூடிய இங்கிலாந்து களங்களில் கோஹ்லி சதம் அடிக்காதது அவரது திறமையை விமர்சனம் செய்வோர் வாய்க்கு அவல் கொடுத்ததை போல இருந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் கோஹ்லி அபார சதம் விளாசினார். முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 300 ரன்களை தாண்ட முடியாமல் சுருண்டிருந்தது. பந்து நன்கு ஸ்விங் ஆனது இதற்கு காரணம். இந்திய பேட்ஸ்மேன்களும் நடையை கட்டிக்கொண்டிருந்தனர். ஆனால், இந்த ஒரு களத்திலும் விராட் கோஹ்லி அசத்தலாக சதம் அடித்து விமர்சகர்கள் வாயை அடைத்தார்.
A post shared by Virat Kohli (@viratkohli.143) on
சதம் அடித்ததுமே, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா நின்றுகொண்டிருந்த பெவிலியன் திசையை நோக்கி, தன் கழுத்தில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை வெளியில் எடுத்து முத்தமிட்டு காண்பித்தார்.
தனது கோபத்தை கட்டுப்படுத்த அனுஷ்காதான் உதவியாக இருப்பதாக கோஹ்லி நினைக்கிறார். அதன் ஒரு பகுதியாக இந்த சிறந்த இன்னிங்சை அனுஷ்காவுக்கு அவர் பரிசளித்தார். இந்த போட்டோ, வீடியோ வைரலாகியுள்ளது.