ரெண்டே நிமிடம் தான்.. சத்தமில்லாமல் சரிந்த நிலம்.. கிராமத்தை விழுங்கிய கடல்.. ஷாக் தரும் வீடியோ!
நார்வே நாட்டில் நிலச்சரிவால் வீடுகள் சில கடலில் மூழ்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஓஸ்லோ: நார்வே நாட்டில் ஒரு கிராமமே கடலில் மூழ்கும் பேரதிர்ச்சி தரும் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
சமூகவலைதளங்களில் பல வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் ரசிக்கும்படியாக இருக்கும். சில வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும்படியாக அதிர்ச்சி தரும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.
நார்வே நாட்டின் ஆல்டா எனும் பகுதியில் நேற்று நடந்த பேரிடர் சம்பவம் இது. எந்தவிதமான சத்தமும் இல்லாமல் மிக அமைதியாக நடந்துள்ள இந்த சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது.
"நீரின்றி அமையாது உன் உலகு".. மீண்டும் என்னை தேடி வருவாய்!
பேரமைதி
ஆல்டா எனும் அந்த கடற்கரை கிராமத்தில் நேற்று மக்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். எந்தவிதமான சத்தமோ, பேரலைகளோ, அதிர்வுகளோ எதுவும் இல்லை.
கடலில் மூழ்கிய கிராமம்
திடீரென அந்த கிராமத்தின் ஒரு பகுதி மெல்ல மெல்ல கடலுக்குள் செல்லத் தொடங்கியது. இதை உணர்ந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த கிராமத்தின் ஒரு பகுதியை கடல் விழுங்கிவிட்டது.
மக்கள் அதிர்ச்சி
மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த பேரிடரில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. எட்டு வீடுகளையும், அதில் இருந்த பொருட்களையுமே கடல் கொண்டு சென்றுவிட்டது. அந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உலக சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் இப்படி ஒரு சம்பவமா என வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.