ஒபாமாவின் மகள்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஸ்டீபன்?
சிகாகோ: லாஸ் வேகாஸில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஸ்டீபன் பாடக் சிகாகோவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஹோட்டல் ஒன்றின் 32வது மாடியில் இருக்கும் அறையில் இருந்து ஸ்டீபன் பாடக் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் 59 பேர் பலியாகினர்.
இந்நிலையில் சிகாகோ நகரில் ஆகஸ்ட் மாதம் லோலாபலூசா இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது ப்ளூஸ்டோன் ஹோட்டலில் அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்த்தபடி இருந்த 2 அறைகளை ஸ்டீபன் பாடக் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறைகளை முன்பதிவு செய்தபோதிலும் ஸ்டீபன் வரவில்லை என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகாகோ இசை நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் மால்யா, ஷஷா, மேயர் ரஹ்ம் இமானுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.