For Daily Alerts
Just In
இந்தப் பூச்சிக்கு இடமா கிடைக்கலை... பெண்ணின் மூக்கில் ஒரு மாதமாக குடியிருந்த அட்டைப் பூச்சி!
துபாய்: துபாயில் இளம் பெண் ஒருவரின் மூக்கு பகுதியில் இருந்த அட்டைப் பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அந்தப் பெண் நீச்சல் மேற்கொண்ட போது மூக்கிற்குள் இந்த அட்டை நுழைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்தை சேர்ந்த லிவரணி என்ற அந்த 24 வயது இளம் பெண் வயது ஒருவர் தென் கிழக்கு ஆசியாவில் சுற்று பயணம் மேற்கொண்ட போது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது.
ஒரு முறை பைக் விபத்தில் கிழே விழுந்ததால், அதன் பாதிப்பால் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதோ என்று எண்ணியுள்ளார். ஒரு மாத காலமாகவே இப்பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது.
பின்னர் இங்கிலாந்து திரும்பியவுடன் மருத்துவ சோதனை செய்த போது மூக்கில் 3 இன்ச் அளவில் அட்டை பூச்சி இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக சிகிச்சை செய்து மருத்துவர்கள் 3 அங்குல அட்டையை அகற்றியுள்ளனர்.
Comments
English summary
Dubai doctors done a surgery and removed a leech from a lady’s nose.
Story first published: Monday, October 13, 2014, 15:22 [IST]