ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரியில் பிறந்தார்- உ.பி.அயோத்தியில் கிடையாது- நேபாள பிரதமர் ஒலி 'அடம்'
காத்மண்டு: ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்; இந்தியாவின் உத்தரப்பிரதேசத்து அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை விஸ்வரூபமாக்கி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவுடன் மல்லுக்கட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் நேபாள பிரதமர் ஒலி. இந்திய நிலப்பகுதிகளை சொந்தம் கொண்டாடி நேபாள வரைபடத்தில் இணைத்தார் ஷர்மா ஒலி.
பீகாரில் தேர்தல்...ஒதுங்கிய நிதிஷ்...ராமர் கோயிலுக்கு வாழ்த்து இல்லை...இதுதான் காரணம்!!
ராமர் குறித்து சர்ச்சை
அத்துடன் நிற்காமல் ராமர், நேபாளத்தில்தான் பிறந்தார் என திடீரென கூறி சர்ச்சைக்கு வித்திட்டார். இதனால் அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடி எல்லாம் ஏற்பட்டது. ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ராமர் கோவில் பூமிபூஜை
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
ஷர்மா ஒலி பஞ்சாயத்து
இதனிடையே நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் ராமரின் பிறப்பை முன்வைத்து பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார். ராமர் பிறந்தது தெற்கு நேபாளத்தில் அயோத்தியாபுரியில்தான்; இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இல்லவே இல்லை என அடித்துச் சொல்லி இருக்கிறார் ஷர்மா ஒலி.
புது கட்சி தொடங்கும் ஒலி?
இந்தியாவை சீண்டி சீனாவை குளிர்விக்கும் வகையில் ஷர்மா ஒலி செயல்பட்டு வருகிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. ஷர்மா ஒலியின் இந்த போக்கால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியே இரண்டாக பிளவுபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சீனா ஆதரவாளர்களைக் கொண்ட புதிய கட்சியை ஷர்மா ஒலி உருவாக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.