மெக்சிகோவில் 7.5 அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்... கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்!
மெக்சிகோவின் தென்கிழக்கில் 7.2 அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மெக்சிகோ சிட்டி : தெற்கு மெக்சிகோவில் 7.2 அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஓக்சாகாவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜியாலஜிகல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகில் போதை பொருள் கடத்தலுக்காக அதிகம் கொலைகள் நடைபெறும் மெக்சிகோ நாட்டின் தெற்கே மெக்சிகோ சிட்டியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மெக்சிகோ சிட்டியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
ஓக்சாகா என்ற பகுதியில் மையமாகக் கொண்டு பசிபிக் கடலோரம் 26.7 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ நகரத்தில் உயரம் ஆன கட்டிடங்கள் ஒரு நிமிடத்திற்கும் மேல் ஊசலாடின. தெற்கு பகுதியில் உள்ள கவுதமாலா நகர் வரை உணரப்பட்டு உள்ளது. இதனால் அச்சத்தில் உறைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் தஞ்சடைந்தனர். ஓக்சாகா விரைந்துள்ள அவசரகால உதவிக்குழு பொருட்கள் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் நிலநடுக்கம் உருவாகி இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2 முறை மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 8ல் ஏற்பட்ட 8.1 அளவு நிலநடுக்கத்தில் 90 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 19ல் 7.1 அளவு மெக்சிகோ சிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 216 பேர் பலியாகினர்.