பப்புவா நியூக்கினியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி அபாய எச்சரிக்கை
போர்ட்மோர்ஸ்பை: பப்புவா நியூக்கினியா அருகே பசுபிக் பெருங்கடல் பகுதிதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7.7ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பப்பு நியூகினியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த நியூ பிரிட்டனர் தீவு அருகே சுமார் 54 கி.மீ தொலைவில் கோகோபோவில் உருவாக்கியுள்ளதாக கூறப்படு்கிறது.
இதன்காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாக பசிபி்க் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூக்கினியாவியைச் சுற்றி 1000 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.