நிதி மோசடி வழக்கு: மகிந்த ராஜபக்சே நாளை கைதாக வாய்ப்பு ?
கொழும்பு: நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நாளை கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக இலங்கையில் இருந்து வந்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்த போது, 975 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே இந்த மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு மகிந்தா ராஜபக்சே, சுசில் பிரேம ஜயந்தே உள்ளிட்ட 5 பேருக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் ஊழல் ஓழிப்பு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
விசாரணைக்கு அழைப்பதோடு ராஜபக்சே கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ராஜபக்சே கைது செய்யப்படுவதை தடுக்க அவரது ஆதரவாளர்கள் தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.