For Quick Alerts
For Daily Alerts
Just In
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் – உக்ரைனில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம்
நியூயார்க்: மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசர கூட்டம் உக்ரைனில் கூட்டப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 295 பேர் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக "இச்சம்பவம் பற்றிய முழுமையான, சுதந்திரமான சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்படும்" என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கான ஐ.நா. விவகாரப் பிரிவுதான் இந்த அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
Comments
English summary
The UN Security Council will hold an emergency meeting today morning on Ukraine. Britain's UN Mission said yesterday it requested the meeting and later tweeted that it is set for 10 am today.
Story first published: Friday, July 18, 2014, 12:28 [IST]