மீண்டும் நடந்த இவ்விமான விபத்தை ஜீரணிக்கவே முடியாது... கொந்தளிக்கும் உறவினர்கள்
கோலாலம்பூர்: மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தங்களால் ஜீரணத்துக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளனர் மலேசியர்கள்.
காணாமல் போன எம்ஹெச்370 விமானத்தினால் ஏற்பட்ட வடுவே இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் இப்படி மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
295 பேர் உயிரிழ்ந்துள்ள இந்த சம்பவத்தால், ஏற்கனவே நடைபெற்ற மலேசிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
நாங்கள் பட்ட வேதனையை தற்போது இந்த 295 பேரின் குடும்பத்தினரும் அனுபவிப்பார்களே என்று வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்களுக்கு பதவியில் இருப்பவர்கள் தக்க பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் கொந்தளித்து போய் உள்ளனர். இது பற்றிய டுவிட்டர் செய்தியில், "நாம் அனுபவித்த துன்பத்தினை அனுபவிக்கும் 295 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதலாக இருப்பதுதான் நம்முடைய உறவினர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.