உச்ச நீதிமன்றத்தை அவமதித்த மாலத்தீவு அரசை கண்டித்து சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா
மாலே: மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமவமதித்த அரசை எதிர்த்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹுசைன் ராஷித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாலத்தீவில் உள்ள உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் அவர் 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
அதிபரின் இந்த செயலை கண்டித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹுசைன் ராஷித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாட்டின் உயர் அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத அரசுடன் சேர்ந்து பணியாற்ற என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று ராஷித் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த பின் பதவியை ராஜினாமா செய்துள்ள முதல் நபர் ராஷித் தான்.