For Daily Alerts
Just In
இந்தியாவில் கடனாக பெற்ற ரூ.9,000 கோடியை அடைக்க தயார்- விஜய் மல்லையா திடீர் அறிவிப்பு
இந்தியாவில் கடனாக பெற்ற ரூ.9000 கோடி கடனை அடைக்க தயாராக உள்ளதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.
Recommended Video
கடன் தொகையை செலுத்த தயார்-விஜய் மல்லையா | ட்ரம்ப்-கிம் சந்திப்பில் உளவு கருவி- வீடியோ
லண்டன்: இந்தியாவில் கடனாக பெற்ற தொகையை உடனடியாக செலுத்த தயாராக உள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9000 கோடி அளவுக்கு விஜய் மல்லையா கடன் பெற்றார். இந்த கடன்களை திருப்பி செலுத்தாமலேயே லண்டனுக்கு கடந்த 2015-2016-ஆம் ஆண்டில் தப்பிவிட்டார்.
இதையடுத்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வந்தது. மேலும் லண்டன் ஸ்காட் யார்டு போலீஸாரால் இரு முறை கைது செய்யப்பட்டு சில விநாடிகளில் ஜாமீன் பெற்றார்.
ரூ.9000 கோடியை கோட்டை விட்டு விட்டு ஏழைகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்கின்றனர் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் லண்டனில் உள்ள மல்லையா தான் பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகளையும் அவர் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
English summary
Vijaya Mallya flies to London after getting Rs. 9000 crore loans from Indian banks. Now he says ready to pay the loans.
Story first published: Tuesday, June 26, 2018, 14:16 [IST]