குறைந்த விலையில் ஐபேட் ஏர் 2 ஆர்டர் செய்தவருக்கு ஆப்பு வைத்த ஆன்லைன் நிறுவனம்!
நியூயார்க்: ஆன்லைனில் குறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் 2வினை ஆர்டர் செய்தவருக்கு வெறும் பேப்பரை அனுப்பி ஆன்லைன் நிறுவனம் ஒன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபேட் ஏர் 2 ரூபாய் 35,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆன்லைன் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் இதன் தள்ளுபடி விலை வெறும் ரூபாய் 6,600 அதாவது 100 அமெரிக்க டாலர்கள் மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நல்ல வாய்ப்பாக கருதிய ஒருவர் உடனடியாக இந்தத் தள்ளுபடியிலேயே ஐபேட் ஏர் 2 வை வாங்கினார். வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டதும் அந்த ஐபேட் பார்சலை ஆசையாகப் பிரித்துப் பார்த்தவருக்கு அது வெறும் பேப்பர் என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.
ஐபேடின் முன்புறம் போன்ற பிளாஸ்டிக் அட்டைப் படத்துடன் கார்ட்போடை வைத்து, பின்புறத்தை டேப் அடித்து நிஜமான ஐபேடை போலவே, வைத்திருந்தனர் அந்த ஆன்லைன் நிறுவனத்தினர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் அப்போட்டோவை வெளியிட்டுள்ளார் ஏமாந்த அந்த நபர். மேலும், "ஹலோ இது ஒரு நல்ல பேப்பர், ஐ "பேட்" ஏர் 2" என்று தனது சோகக் கதையை ஜாலியாக வெளியிட்டுள்ளார்.