எரிமலைக்கு தேனிலவு.. பள்ளத்தில் விழுந்த கணவன்.. அதிர்ச்சி அடைந்த மனைவி.. நடந்தது என்ன?
இண்டியானா: அமெரிக்காவின் இண்டியாவில் உள்ள இளம் தம்பதி தேனிலவுக்காக கரீபியன் பகுதியில் உள்ள எரிமலைக்கு சென்றபோது அங்கு பள்ளத்தில் விழுந்த கணவரை மனைவி காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியனா பகுதியைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டேன். இவரது மனைவி அகைமியி சாஸ்டேன். இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடந்தது.
இவர்கள் தேனிலவுக்காக கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள லியமியுகா என்ற எரிமலையின் உச்சிக்கு தேனிலவுக்காக சென்றனர். திட்டமிட்டபடி இருவரும் மலை உச்சிக்கு சென்றனர்.
பள்ளத்தில்
எனினும் எரிமலையை சரியாக பார்க்க வேண்டும் என கிளே சாஸ்டேன் விரும்பினார். அப்போது அங்கு இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது 50- 70 அடி வரையிலான பள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
எரிமலை
இதனால் அகைமியி மிகவும் அச்சமடைந்தார். உதவிக்கு அழைத்தும் யாரும் அங்கு இல்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு கணவனுக்கு கை கொடுத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் இருவரும் எரிமலையை விட்டு வெளியே வந்தனர்.
கயிற்றின் உதவி பள்ளத்தில் விழுந்ததால் கிளேவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. முகத்தாடையில் அடிப்பட்டது. இதுகுறித்து கிளே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியும். எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு பாராட்டுகள். எரிமலை பள்ளத்தில் ஒரு கயிற்றின் உதவியுடன் இறங்கினேன். பள்ளத்தில் விழுந்ததால் கிளேவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. முகத்தாடையில் அடிப்பட்டது. இதுகுறித்து கிளே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியும். எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு பாராட்டுகள். எரிமலை பள்ளத்தில் ஒரு கயிற்றின் உதவியுடன் இறங்கினேன்.
பள்ளத்தில் விழுந்ததால் கிளேவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. முகத்தாடையில் அடிப்பட்டது. இதுகுறித்து கிளே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியும். எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு பாராட்டுகள். எரிமலை பள்ளத்தில் ஒரு கயிற்றின் உதவியுடன் இறங்கினேன்.
வலிமை
நான் அதிக எடையில் இருந்ததால் தவறிவிழுந்துவிட்டேன். பின்னர் கடவுளின் கிருபையால் உயிர் தப்பினேன். மிகவும் வலிமை வாய்ந்த என் மனைவி எப்படியோ என்னை காப்பாற்றிவிட்டார். திரும்பி வரும் போது எனக்கு மூக்கில் ரத்தம் வந்தது. அப்படியே அமெரிக்காவுக்கு வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.