பெற்ற மகள் என்று தெரியாமலேயே மாணவியை கர்ப்பமாக்கி தாயாக்கிய ஆசிரியர்!
ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் பெற்ற மகள் என்று தெரியாமல் மாணவியைத் தாயாக்கியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.
தென்னாப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் ஆல்பிரட் மோகோயேனா என்பவர் தனது பள்ளியில் படித்த ஒரு சிறுமியுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தகாத முறையில் உறவு வைத்து அவளை கர்ப்பினியாக்கினார்.

தாயுடனும், வளர்ப்பு தந்தையுடனும் வாழ்ந்து வந்த அந்த சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து சில ஆண்டுகள் ஆகின்றன. இந்த செய்தியை உள்ளூர் ஊடகத்துக்கு கசியவிட்ட ஒரு பத்திரிகையாளரை ஆல்பிரட் மோகோயேனா கொல்லவும் முயற்சித்தார்.
இந்நிலையில், தற்போது 20 வயது பெண்ணாக உள்ள அவர், சமீபத்தில் தனது பிள்ளையின் டி.என்.ஏ.வை பரிசோதித்தபோது, தன்னை சிறுவயதில் கெடுத்து, சீரழித்தது தனது தாயின் முதல் கணவன்தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
என் அப்பாதான் என் குழந்தைக்கும் அப்பா என்பதை என் மகனிடம் நான் எப்படி கூறுவேன் என அந்தப் பெண் புலம்பிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications